Skip to main content

பாகற்காய் (bitter gourd) உண்மையிலேயே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்குமா ...?


●பசுமையாக உள்ள பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற  தொல்லைகளை தீர்க்கும். 



●பாகற்காயினை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி
கூடும். ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால் ஈரல் தொடர்பான  பிரச்சனைகள் தீரும். 




●வாரத்தில் 3 தடவையாவது  பாகற்காய்  சாப்பிடுவது மிகவும் சிறப்பாக அமையும். ஏனெனில் இது கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயத்தை பாதுகாக்கிறது.மேலும்  பசியினையும் அதிகரிக்கும். 


●பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும். 


●பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள்(anti oxidants),
கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். 


● பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. 


● முக்கியமாக பாகற்காய் சாறானது  டைப் 2 நீரிழிவு (type 2 diabetes) நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு  வருகிறது. 


●பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. 



● பாகற்காய், உணவுப் பையிலுள்ள ( stomach) பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். 


●பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்,  இருமல், இரைப்பு, மூலம்,  வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சட்னி

கற்றாழை ஜெல் (Aloe Vera) எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!!

🟢 உதடு வெடிப்பை போக்கும் இயற்கை மருத்துவம் 🟢