●பசுமையாக உள்ள பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற தொல்லைகளை தீர்க்கும்.
●வாரத்தில் 3 தடவையாவது பாகற்காய் சாப்பிடுவது மிகவும் சிறப்பாக அமையும். ஏனெனில் இது கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயத்தை பாதுகாக்கிறது.மேலும் பசியினையும் அதிகரிக்கும்.
●பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும்.
கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
● பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
● முக்கியமாக பாகற்காய் சாறானது டைப் 2 நீரிழிவு (type 2 diabetes) நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
●பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
● பாகற்காய், உணவுப் பையிலுள்ள ( stomach) பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.
●பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.





🤝🤝👍
ReplyDelete