பொதுவாக டீ மீது அனைவருக்கும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதன் நன்மை, தீமை ஆகியவற்றுக்கு அப்பார்ப்பட்டு அதன் மீது அடிமையாய் திகழ்வோரும் உண்டு.
டீக்கு உற்சாகம் அளிப்பது தேயிலையே. அதாவது டீத்தூள். அதைக் கொண்டு நமது உடலையும் பாதுகாக்க முடியும் எவ்வாறு என்பதை இந்த பகிர்வு உங்களுக்கு தெளிவு படுத்தும்.
✅🟢 சளி, இருமலைப் போக்கும் கற்பூரவள்ளி டீ 🟢✅
🟥🔹தேவையான பொருட்கள்🔹கற்பூரவள்ளி இலை – 5
🔹ட தூள் – 1 டீஸ்பூன்
🔹தேன் – தே.அ
🔹தண்ணீர் – 2 கப்
🔹எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
🔹இஞ்சி – ½ துண்டு
🔹மிளகு – 4
🔹ஏலக்காய் – 1
🟥🔹செய்முறை
கற்பூரவள்ளி இலைகளை நீரில் நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் டீ தூளை போட்டு கொதிக்க வையுங்கள்.
பின்பு அதில் கற்பூரவள்ளி இலையையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். பின்பு இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி அதில் போடுங்கள். அதன்பின்னர் ஏலக்காயை இடித்து அதில் போடுங்கள். நன்கு கொதித்த பின்னால் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு டீ கோப்பையில் ஊற்றி அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து குடியுங்கள். மாலை வேளையில் இதனை தயார்செய்து குடித்து பயனடையுங்கள்.
🟥🔹கற்பூரவள்ளி – மருத்துவ பயன்கள்
கற்பூரவள்ளி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
இலைச் சாற்றை பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.
சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.
கற்பூரவள்ளி இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும்.
வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது.
மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்
Comments
Post a Comment